பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறவில்லை

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை விட்டுச் சென்றுள்ளதாக பரவிய வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என , விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் வைரஸ் தொற்றுக்கு உள்ளானதை அடுத்து அவர் இன்னும் வைத்தியசாலையில் இருப்பதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பசில் மூன்று முக்கிய விமான நிலையங்களான கட்டுநாயக்கா, மத்தல மற்றும் இரத்மலானை ஊடாக நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும், அத்தகைய வதந்திகள் பொய்யானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று காலை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், முன்னாள் நிதியமைச்சரை இந்த விமானத்தில் செல்லவில்லை என்றும் ஷெஹான் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்றுடன் நேற்று வெள்ளக்கிழமை அனுமதிக்கப்பட்ட பசில் தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன.