நுவரெலியா தம்பதிகள் மரணம் கொலையா?

நுவரெலியாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கணவன் மனைவியின் சடலங்கள் பாதுகாப்பான இடத்தில் அடையாளமிட்டு புதைக்கப்பட வேண்டும் எனவும் சடலங்கள் புதைக்கப்படும் இடத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நீதவான் நாலக்க சஞ்சீவ வீரசிங்க பொலிசாருக்கு விசேட உத்தரவு பிறப்பித்தார்.

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதணை சட்ட வைத்தியர் ஒருவரின் ஊடாக மேற்கொண்ட பின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதவான் இது தொடர்பான அறிக்கை மற்றும் சட்டவைத்தியரின் அறிக்கையை சம்பவம் தொடர்பான வழக்கில் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் சமர்பிக்க வேண்டும் எனவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மரண விசாரணை நடத்திய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா நுழைவாயில் பகுதியான டொப்பாஸ் கிராமத்தில் உள்ளூர் துப்பாக்கி வெடித்து கணவன் மற்றும் மனைவி நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 10.30 மணியலவில் உயிரிழந்தனர்.

இதன்போது எண்டன் தாஸ் (வயது – 31) மற்றும் நாதன் ரீட்டா (வயது – 31) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

எண்டன் தாஸ் என்பவரின் தாயிடம் (வயது – 54) விசாரணை செய்த பொலிஸார் அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அதன்படி வீட்டில் எனது மகனும் மருமகளும் வசித்து வந்தனர். எனது மகன் தாஸ் தின கூலிக்கு மரக்கறி தோட்டத்தில் தொழில் செய்கிறார். எனது மருமகள் ரீட்டா வீட்டு மனைவியாக இருந்து வருகிறார். நான் கொழும்பில் வீடொன்றில் பணியாளரக தொழில் செய்து வருகிறேன்.என தெரிவித்த அவர் மகனின் வீட்டுக்கு கடந்த 5ஆம் திகதி கொழும்பில் இருந்து வருகை தந்தேன் எனவும் தெரிவித்தார்.

இரவு நான் வீட்டில் தனியறையில் டிவி பார்த்துகொண்டிருந்தேன்.மகனும் மருமளும் வீட்டு முன் அறையில் இருந்தார்கள்.இவர்கள் ஏதோ கதைத்து கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள் நேரம் செல்ல இவர்களிடத்தில் சத்தம் அதிகமானது அதை இவர்கள் சண்டையிடுகின்றார்களோ என உணர்ந்தேன்.

இரவு 10.30 மணியலவில் வெடி சத்தம் கேட்டது ஒடிபோய் பார்த்தேன் எனது மருமகள் தரையில் தலை தொங்கிய நிலையில் கிடந்தார் அவரின் வயிற்று பகுதியிலிருந்து அதிகமாக இரத்தம் வெளியாகியிருந்தது.

அப்போது மகன் சாரத்தை மடித்து கட்டிக் கொண்டு அதிர்ச்சிகரமான நிலையில் தரையில் அமர்ந்திருந்தார்.என்ன வெடித்தது என்ன நடந்தது என கேட்டேன் இல்லை இவளை மின்சாரம் தாக்கிவிட்டது யாரையாவது கூப்பிடு வைத்தியசாலைக்கு போக வேண்டும் என்றார்.

உடனே நான் வேளியில் வந்து அயலவர்களை அழைத்தேன் மீண்டும் வெடி சத்தம் கேட்டது ஒடி பார்த்தேன் மகன் தலையில் இருந்து அதிக இரத்தம் வந்த நிலையில் தரையில் கிடந்தான்.

அருகில் துப்பாக்கியும் இரத்தத்தில் கிடந்தது பின் பதற்றமாகிய நான் இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் உதவியுடன் 119க்கு அழைப்பு விடுத்த நிலையில் நுவரெலியா பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர் என வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

இதேவேளை தாயின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு எண்டன் தாஸ்க்கு உள்ளூர் துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? மகனுக்கும் மருமகளுக்கும் வாய்தர்க்கம் ஏன் ஏற்பட்டது? துப்பாக்கி எவ்வாறு வெடித்தது? என்ற மூன்று கேள்விகளுக்கு விடை காணும் வகையில் நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை செய்து வருகின்றனர்.

சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதணை சட்ட வைத்தியர் எம்.எம்.குணத்திலக்க முன்னிலையில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்