நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது
-யாழ் நிருபர்-
திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும், வடமராட்சி – குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் கம்பெனியின் சொத்துக்கள், ஆவணங்கள், தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடிய சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கைது செய்ய சென்ற பொலிஸாரை தாக்கியதுடன் தப்பி ஓட முயன்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை மருதங்கேணி பொலிஸார் தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்