நாளை முதல் புதிய அஸ்வெசும விண்ணப்பங்கள்

அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் நாளை சனிக்கிழமை முதல் கோரப்பட உள்ளன.

பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன.

இதேவேளை பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சில நிபந்தனைகள் திருத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

‘அஸ்வெசும’ பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 2 மில்லியன் ஆக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்