நாளைய மின் தடை விபரம் 

நாடளாவிய ரீதியில் நாளை  செவ்வாய்க்கிழமை  சுழற்சி முறையில் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் 5 மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 8.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரையான காலப்பகுதிக்குள் 5 மணிநேரமும், மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க