நாயால் கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம்

சீனாவில் லீ என்பவரின் நாய், 41 வயதான கர்ப்பிணியைப் பயமுறுத்தியதால் அவரின் 4 மாதக் கருக் கலைந்துள்ளது.

கர்ப்பமடைவதற்காக மூன்று வருடங்களுக்கும் மேல் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தையை இழந்ததாக யான் என்ற பெண் வேதனை அடைந்துள்ளார்.

இதனையடுத்து நாயின் உரிமையாளர் லீ மீது அப்பெண் வழக்கு தொடர்ந்தார்.

பொது இடங்களில் நாயைக் கட்டி வைக்காமல் அவிழ்த்து விட்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கர்ப்பிணிக்கு இழப்பை ஏற்படுத்தியதால் அவருக்கு சுமார் 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று லீக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்