துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்-

கோப்பாய் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை குறித்த இளைஞன் எடுத்து சென்ற போது, அப்பகுதியில் கடமையில் இருந்த யாழ்ப்பாண பொலிஸார் இளைஞனை மறித்து விசாரணைகளை முன்னெடுத்த போது, துவிச்சக்கர வண்டியினை இளைஞன் திருடி செல்வதனை அறிந்து இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

அதேவேளை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட துவிச்சக்கர வண்டியில் வருவோர், வைத்திய சாலை சூழலில் தமது துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தி விட்டு செல்லும் போது அவை களவாடப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அது தொடர்பில் பல முறைப்பாடுகள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பொலிஸார் வைத்தியசாலை சூழலில் தமது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.