தாய் கண் முன்னே இளம் பெண்ணை தூக்கிச்சென்ற 58 வயது நபர்

கொழும்பில் உள்ள உடுகம பகுதியில் 27 வயது பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை பொலிஸார் கைதுசெய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்து சந்தேக நபர்களான மூவரும் பெண்ணுடைய தாயாரின் கைகளைக் கட்டிவைத்து விட்டு காரில் பெண்ணை கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய 58 வயதுடைய பிரதான சந்தேக நபர் செல்லகதிர்காமம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் ரயில் சாரதி என தெரியவந்துள்ளது.

அவருடன் வந்த ஏனைய மூன்று சந்தேக நபர்களும் காலி குருந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் கடத்தப்பட்ட பெண் ஒரு குழந்தையின் தாய் என்பதுடன் இவர் கணவரைப் பிரிந்து வாழ்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்