தாய்லாந்துக்கு பயணமானார் மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய் கிழமை அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இந்த பயணத்தில் 9 பேர் கொண்ட குழு மைத்திரிபால சிறிசேனவுடன் பயணித்துள்ளனர்.

இன்று அதிகாலை 12.55 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகருக்கு இவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்