தாயையும் சகோதரனையும் கோடரியால் தாக்கிய இளைஞன்

மஸ்கெலியாவில் ஒருவர் தனது தாயையும் சகோதரனையும் கோடரியால் தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மொட்டிங்ஹேம் தோட்டத்தில் வசிக்கும் சந்திரகுமார் என்ற குறித்த இளைஞனே இந்த தாக்குதலை நடாத்தியுள்ளார்.

இந்நிலையில் அயலவர்கள் அவரை தடுக்க முயன்ற போது அவர்களையும் குறித்த நபர் தாக்க முற்றட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மஸ்கெலியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு குறித்த நபரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள மஸ்கெலியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்