தவறான முடிவு எடுத்த இளைஞர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்-

சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுணாவில் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் கையளிக்குமாறும் உத்தரவிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்