செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி விவசாயத்தில் புதிய மாற்றம்

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கேகாலை பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை சென்ற போதே அதிபர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை புதிய மாற்றத்திற்கு தயாராக உள்ள தனியார் துறை தொழில்முனைவோருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்காக 100 பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்