சிவராமிற்கு மன்னாரில் அஞ்சலி செலுத்தி மக்கள் சத்திப்பை முன்னெடுத்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

-மன்னார் நிருபர்-

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு நேற்று மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது கலந்து கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து மக்கள் சந்திப்பு இடம் பெற்றது.

இதன் போது கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,சட்டத்தரணி சுகாஸ்,தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • Beta

Beta feature

  • Beta

Beta feature