சிறைக்குள் இருந்து கைதியின் சடலம் மீட்பு

பல்லேகல தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மகையாவ பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி யுவனேஸ் (வயது – 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 54ஆவது பிரிவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்