சிம்பாப்வேக்கு எதிரான போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

சிம்பாப்வேக்கு எதிரான கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி  உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடருக்கு குசல் மெண்டிஸ் கப்டனாகவும்,  துணை கப்டனாக சரித் அசங்காவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும், T20 அணியின் கப்டனாக வனிந்து ஹசரங்கவும், அணியின் துணை கப்டனாக சாரித் செயல்படுகிறார்.

ஜிம்பாப்வே-இலங்கை இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் திகதியும், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் ஜனவரி 14ஆம் திகதியும் தொடங்கவுள்ளது.