சிங்கப்பூரின் பிரதமர் இராஜினாமா

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் (Lee Hsien Loong) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

20 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அவர், ஆட்சி அதிகாரத்தை துணை பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு சுதந்திர நாடாக உருவாகியதிலிருந்து 3 பிரதமர்கள் மாத்திரமே அங்கு ஆட்சி செய்துள்ளனர்.

நாட்டின் முதலாவது பிரதமரும் நவீன சிங்கப்பூரின் ஸ்தாபகர் என அழைக்கப்படுபவருமான லீ குவான் யூ 25 ஆண்டுகள் பதவி வகித்திருந்தார்.

லீ குவான் யூவின் மகனே தற்போது பதவியை இராஜினாமா செய்துள்ள லீ சியென் லூங் (Lee Hsien Loong) ஆவார்.

இவரது பதவி விலகலுடன் சிங்கப்பூரில் லீ குடும்பத்தின் அரசியல் சகாப்தம் நிறைவிற்கு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்