
சிகரெட்டுக்களுடன் பெண் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
செவனகல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் சுற்றுலா விசாவில் துபாய் சென்று சிகரெட்டுகளுடன் குவைத் சென்றுள்ளதுடன் பின்னர் அவர் இன்றையதினம் அதிகாலை 4 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
தனது பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா மதிப்புடைய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 23,600 “மான்செஸ்டர்” சிகரெட்டுகள் அடங்கிய 118 சிகரெட் கார்டூன்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.