‘சமுர்த்தி அபிமானி’ விற்பனைக் கண்காட்சி

-யாழ் நிருபர்-

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் ‘சமுர்த்தி அபிமானி’ விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் இன்று சங்கானை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சங்கானை பிரதேச செயளாலர்  பிரேமினி பொன்னம்பலம், சிறப்பு விருந்தினராக சங்கானை பிரதேச செயலக பிரதம கணக்காளர்  ரி.திருவருட்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டதோடு, சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் ‘சமுர்த்தி அபிமானி’ விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன்  தலைமையில் இன்று யாழ்ப்பாண பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், சிறப்பு விருந்தினர்களாக பிரதம கணக்காளர் என்.எஸ்.ஆர்.சிவரூபன் மற்றும் கணக்காளர் இ.முருகதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டதோடு, உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

மேலும், இவ் விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் நாளைய தினமும் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.