கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

கொரோனா தொற்று உறுதியான மேலும் 40 பேர் இன்று சனிக்கிழமை  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,131ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 4,060 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.