காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் முன் பகுதியில் கனரக வாகனம் மோதி விபத்து

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இன்று புதன் கிழமை காலை மீரா பாலிகா தேசிய பாடசாலை மகளிர் கல்லூரியின் முன் பகுதியில் மீன் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மீன் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாதையை விட்டு விலகி பாடசாலைக்குள் நுழைந்ததில் பாடசாலை முன்பகுதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வாகனமும் பலத்த சேதமடைந்துள்ளது.

இதேவேளை வாகனத்தின் சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்