காணித்தகராறு : அண்ணனை கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்த தம்பி

 

சூரியவெவ பிரதேசத்தில் மூத்த சகோதரனை தம்பி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணி தகராறு காரணமாக தனது சகோதரனை இவ்வாறு கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 29 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 24 வயதுடைய இளைய சகோதரர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்