கணவன் உயிரிழப்பு : மனைவியும் முறையற்றகாதலனும் கைது

கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவியும் முறையற்றகாதலனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

உயிரிழந்த நபரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார், மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் 33 வயதுடைய மனைவி மற்றும் அவரது 63 வயதுடைய முறையற்றகாதலன் ஆகியோர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்