
உலக சாதனை ஒன்றை நிகழ்த்துவதற்காக நடை பயணம்
-யாழ் நிருபர்-
இலங்கை மூன்றாவது தேசிய படையணியின் ஸ்ரார் சார்ஜன் பீ.பீ.ரத்ன உலக சாதனை ஒன்றை நிகழத்துவதற்காகவும், நாட்டிற்காக அற்பணித்த அனைத்து நல்லுள்ளங்களை நினைவு கூருவதற்காகவும் நேற்றை தினம் செவ்வாய் கிழமை பிற்பகல் 6:20 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை சக்கோட்டை முனையிலிருந்து தெய்வேந்திரம் முனை வரை நடை பயணம் ஒன்று ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாக மத அனுஸ்டானங்கள் இடம் பெற்றதை தொடர்ந்து 52 ஆவது படை பிரிவு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத் ஆரம்பித்துவைத்தார். அதன் படி தினமும் 60 கி.மீ வரை நடைபயணத்தில் ஈடபடவுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்