இராணுவத் தளபதி உட்பட 10 பேர் பலி

ஆபிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் ஹெலிகொப்டர் வெடித்துச் சிதறியதில் இராணுவத் தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கென்யாவின் வடமேற்கு பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக, உளவுத் துறைக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இராணுவ வீரர்கள் அந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதியை கண்காணிப்பதற்காக இராணுவத் தளபதி உள்ளிட்ட பலர் ஹெலிகொப்டரில் குறித்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் சென்ற ஹெலிகொப்டர் நடுவானில் வெடித்துச் சிதறியுள்ளது.

ஹெலிகொப்டரில் மூத்த இராணுவத் தளபதி பிரான்சிஸ் ஓகொல்லா உட்பட 11 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்