ஹிருணிக்கா பிரேமசந்திர கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் பலந்தமாக பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர கைது செய்யப்பட்டுளளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை குறித்த குற்றச்சாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர், கருவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.