மட்டக்களப்பில் வேட்பாளர் ஒருவரின் வாகனத்தின் மீது தாக்குதல்!

74

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பாலசுந்தரம் சிறிபாலன் மீது இனந்தெரியாதோர் இன்று வியாழக்கிழமை இரவு 6.35 மணியளவில் மேற்கொண்ட கல்வீச்சினால் அவரது காரின் கண்ணாடி உடைந்துள்ளது.

ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் ஆயித்தியமலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு,அதனை நிறைவு செய்த பின்னர் நொச்சிமுனையிலுள்ள தமது வீடு நோக்கிக் காரில் பயணிக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து அவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath