பல உயிர்கள் கடலில் சங்கமமாகிய மூதூர் படகு விபத்து இடம்பெற்று 30 வருடங்கள்!

-மூதூர் நிருபர்-

 

மூதூர் கடல் பிராந்தியத்தில் 1993 ஆம் ஆண்டு பாரிய விபத்து இடம்பெற்று, இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவடைந்துள்ளது.

பல மரணங்களை ஏற்படுத்திய கோர சம்பவமாக இன்று வரை பேசப்படும் இவ் விபத்து, 1993-01-25 அன்று மூதூரில் இடம்பெற்றிருந்தது.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து, 1993-01-25 அன்று மாலை 3:05 மணியளவில், மூதூர் துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்ட இயந்திரப்படகு (ரிபிசி 117), கடலில் ஏற்பட்ட அசாதாரண நிலையினால், பாதாள மலை என்று அழைக்கப்படுகின்ற கடல் பரப்பில், மாலை 3:45 மணியளவில் கவிழ்ந்து மூழ்கடிக்கப்பட்டது.

இதன் போது படகில் பயணித்த 120 பேரில், சுமார் 59 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்

அவர்களுள், மொத்தமாக 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு, மிகுதி 46 பேரின் சடலங்கள் நீரோடு சமாதியாகின.

மூதூரைச் சேர்ந்த 43 பேரும், தோப்பூரைச் சேர்ந்த 09 பேரும், சம்பூர் கட்டைபரிச்சானைச் சேர்ந்த 04 பேரும், பூநகரைச் சேர்ந்த ஒருவருர் இதன்போது உயிரிழந்தனர்.

இந்த விபத்து இன்றும் மூதூர் மக்களின் மனதில் அழியாத வடுவாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்