தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் போலித் தகவல்: பொதுமக்களுக்கு அறிவித்தல்

தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா முன்னதாக முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாமல், இரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாகச் சுத்திகரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட 80,000 மில்லியன் கிலோகிராம் நிறையுடைய எண்ணெய், சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி சில்வா குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்