இரவுநேர களியாட்ட விடுதியில் தீ பரவல்: 51 பேர் பலி

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வட மசிடோனியாவில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதியில் நேற்று சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த களியாட்ட நிகழ்ச்சியில் 2 நூறிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடுதியில் மேற்கூரையில் தீப்பற்றியதையடுத்து இந்த தீப்பரவல் நிகழ்ந்துள்ளது.

மேலும் நூறிற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க