
அடுத்த வாரம் இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாம் தொகுதி உப்பு!
இறக்குமதி செய்யப்படவுள்ள உப்புத் தொகையின் முதலாம் தொகுதி எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவிந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உப்பு தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக 30,000 மெற்றிக் டன் உப்பை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.
அதற்கமைய, முதற்கட்டமாக 4,050 மெற்றிக் டன் உப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
இந்தியாவில் இருந்து குறித்த உப்புத் தொகை இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவிந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்