நீதிமன்ற அவமதிப்பு : ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 4 ஆண்டுகள் சிறை

ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

2009 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த குற்றச்சாட்டிலும், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ரூபா 300,000 அபராதமும் உயர் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது