உலக அமைதியை வேண்டி நடைபெற்ற ‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் வியட்நாமின் பஞ்ஞாகர தேரரை சந்தித்து சுமூகமாகக் கலந்துரையாடினார்.
அமைதிக்கான நடைபயணம் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பௌத்த எழுச்சியைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாத்து, இலங்கையை அமைதி மற்றும் மனிதாபிமானத்தின் தீவாக மேம்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.
அதற்காகவும், உலக அமைதிக்காகவும் தேரர் ஆற்றிவரும் அர்ப்பணிப்பிற்கு இலங்கை மக்கள் சார்பாக தனது கௌரவமான நன்றியையும் ஜனாதிபதி தெரிவித்தார்.
