26 பாடசாலைகள் பூட்டு

மோசமான காலநிலை காரணமாக ஊவா மாகாணத்தில் உள்ள 26 பாடசாலைகளை இன்று வியாழக்கிழமை மூடுவதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் டி.எம்.ரத்நாயக்க ஏற்பாடு செய்துள்ளார்.

ஊவா மாகாணத்தில் நேற்று பெய்த காற்று மற்றும் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

இதன்படி, பசறை கல்வி பிராந்தியத்தில் 20 சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளும், பிபில பிரதேசத்தில் 3 பாடசாலைகளும் மொனராகலை பிரதேசத்தில் 3 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இது தவிர, பசறை-கனவரெல்ல வீதியில் இருந்து நமுனுகுல கிளப் சந்தி வரையான பகுதி, வீதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக முற்றாக மூடப்பட்டது.