திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறித்த தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்த யோசனை தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.