அபிவிருத்தி லொத்தர் சபையின் 3 கோடியே 26 இலட்சம் ரூபா வெற்றியாளருக்கு காசோலை வழங்கி வைப்பு

அபிவிருத்தி லொத்தர் சபையின் 3 கோடியே 26 இலட்சம் ரூபா வெற்றியாளருக்கு – ஆளுநர் காசோலை வழங்கி வைப்பு

அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு வடமாகாண ஆளுனர்  ஜீவன் தியாகராஜா தலைமையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் குமாரசிறி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட விற்பனை மேம்படுத்தல் அதிகாரி தவகோகுலன், கிளிநொச்சி மற்றும் வவுனியா விற்பனை மேம்படுத்தல் அதிகாரி  பிரதீபன் ஆகியோரின் முன்னிலையில் மன்னார் மாவட்டத்தில் சனிதா ரிக்கற்றின்மூலம் வெற்றிபெற்ற வெற்றியாளருக்கு மாபெரும் சுப்பர் பரிசான 3 கோடி 26 இலட்சம் ரூபா காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

பளைபிரதேசத்தில் வலம்புரி அதிஷ்ட ரிக்கற் மூலம் வெற்றிபெற்ற வெற்றியாளருக்கு 20 இலட்சம் காசோலை மற்றும் சங்கானை, யாழ்பாணம், சாவகச்சேரி, வவுனியாா, மன்னார் பிரதேசங்களில் சனிதா, அதோடிபதிஇகப்ருக்க அதிஷ்ட ரிக்கறூடாக வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு தலா 10 இலட்சம் காசோலைகளும்  ஆளுநர் ஜீவன் தியாகராசாவினால்  வழங்கப்பட்டது