கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தல்

வெளியில் செல்வோர் கட்டாயமாக முக கவசம் அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள சீரற்ற காலநிலை நிலவுகிறது.

இதனால் இதய நோய் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

அத்துடன் சிறுவர்கள் முதியவர்களுக்கு வேறு பல நோய்கள் ஏற்படக்கூடிய சாத்திய கூறு காணப்படுவதனால் வட பகுதியில் வெளியில் பயணிப்போர் கட்டாயமாக முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.