மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் நிலைமையினால் நாட்டிற்கு ஏற்படும் தாக்கம் தொடர்பில் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கூடினர்.
இந்த கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது தற்சமயம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து காணப்படும் போர்ச் சூழல் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
ஈரான் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு, நமது நாட்டில் இருந்து பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால், இது தொடர்பிலும் இங்கு விரிவாக ஆலோசிக்கப்பட்டன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்சமயம் தொழில் புரிந்து வரும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அவர்களின் பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களின் தொழில் நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டதோடு, இந்த விடயத்தில் அரசாங்கத்திடம் அதிக அவதானம் செலுத்துவதற்குமான கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.