மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் மிருக வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் கொழும்பிலிருந்து சென்ற இலஞ்ச ஊழல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியர் மாட்டுப் பட்டியில் மாடுகளுக்கு காதில் இலக்கம் குத்துவதற்கான 26,000 ரூபா இலஞ்சமாக பெற்ற போது இவர் இலஞ்ச ஊழல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரியவருகின்றது.
31 வயதான குறித்த வைத்தியர் ஏற்கனவே பலதடவைகள் இவ்வாறன செயற்பாடுகளில் ஈடுபட்டாக , இப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.