குடும்பத்தகராறு: ஒன்றரை வயதுக் குழந்தையுடன் தீ வைத்துக் கொண்ட பெண்

தம்புள்ளை கண்டலம பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண் கணவருடன் ஏற்படும் வாக்குவாதம் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்தமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பெண் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொள்ளத் தீர்மானித்து வீட்டிலுள்ள அறையில் இவ்வாறு உடலுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளதாகவும் பின்னர் கணவர் குழந்தையின் உடலில் பரவிய தீயை அணைத்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன்போது கடுமையான தீக்காயங்களுக்குள்ளான குழந்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தாய் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண்ணின் 7, 9 வயதுடைய இரு பிள்ளைகளும் பாடசாலைக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க