1000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒடியன் சந்தியில், போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவரை, கல்கிஸ்ஸை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 1000 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, இவர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்