![நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு](https://minnal24.com/wp-content/uploads/2023/05/நீரில்-மூழ்கி-மாணவி-உயிரிழப்பு.jpg)
மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
முந்தலம புலிச்சகுளம் ஏரியில் நீராடச் சென்றவர்களில் பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள உடப்புவ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி நான்கு நண்பிகள் மற்றும் ஒரு நண்பியின் பாட்டியுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை புச்சகுளம் வாவியில் நீராடும்போது இந்த மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்