நாரஹேன்பிட்டியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பெண்களை இரகசியமாகப் படம்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 19 வயதுக்குட்பட்ட இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பல பெண் மருத்துவர்கள், தங்கள் அறைகளில் குளித்துக்கொண்டிருந்தபோது கைபேசிகள் மூலம் படம்பிடிக்கப்பட்டதாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.
அதே இடத்தில் ஆண்களையும் படம்பிடித்ததாக அந்த இரு இளைஞர்கள் மீதும் சந்தேகம் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளது. அந்தப் பதிவுகளில் ஏதேனும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் தற்போது விசாரித்து வருகின்றனர்.
சந்தேக நபர்கள் அலுத்கடே நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தலா ரூ. 5 இலட்சம் தனிநபர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நாரஹேன்பிட்டா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.