புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறை தொடர்பாக சட்ட அறிஞர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட முதற்கட்ட கலந்துரையாடல் வருகின்றபுதன்கிழமை கொழும்பில் நடைபெற உள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் இதற்காக அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் பல அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு உருவாக்க செயல்முறை தொடர்பான சிறப்பு உள்ளக கலந்துரையாடலாக இது நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.