
நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நீரில் மூழ்கிய நிலையில் பொலிஸாரால் மீட்பு
காலி-அஹுங்கல்ல கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், நீரில் மூழ்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளார்.
கடற்கரையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களால் குறித்த நபர் நேற்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட வெளிநாட்டவர் 29 வயதான போலந்து நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
