-மூதூர் நிருபர்-
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு திருகோணமலை – தோப்பூர் பொதுச் சுகாதார பிரிவில் இன்று திங்கட்கிழமை காலை வீடுகளில் விசேட டெங்கு பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், கடற்படையினர், டெங்கு ஒழிப்பு உத்தியோகத்தர்கள் இணைந்து இவ் பரிசோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது டெங்கு நோய் பரவும் வகையில் வீட்டுச் சூழலை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
டெங்கு பரவாமல் வீட்டுச் சூழலை துப்பரவு செய்து பாதுகாப்பாக வைத்திருப்பது தொடர்பாக ஆலோசனையும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.