தேர்தல் சட்டங்களை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய ஐவர் கைது

15

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளைஇ தேர்தல் சட்டங்களை மீறி ஒட்டிய ஐந்து பேர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை பொரளை மயானத்திற்கு அருகில் சுவரொட்டிகளை ஒட்டிய போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து பெருந்தொகையான சுவரொட்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் சுவரொட்டிகளை ஒட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் உந்துருளி என்பவற்றை காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

Sureshkumar
Srinath