சீனாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நள்ளிரவு 11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.
அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.