சமனலவேவ – லந்துயாய பகுதியில், வீதியோர பள்ளத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் இஹலகலகம பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஆவார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சமனலவேவ பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.