ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிட பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயந்த ஜெயசூரிய, நேற்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸிடம் தனது நற்சான்றிதழ்களை வழங்கி கடமைகளைப் பொறுப்பேற்றார்.
ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.