ஏறாவூரில் கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று சனிக்கிழமை காலை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயதர கலைப்பிரிவில் கல்வி பயின்று வரும் நிலையில் இவர் எதிர்வரும் 23ஆம் திகதி உயர்தர பரிட்சைக்கு தோற்றவுள்ள நிலையிலேயே உயிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இச்சம்பவத்தில் மனாப்தீன் அப்தூர் ரஹ்மான் (வயது-20) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்று காலை குடும்ப சகிதம் கடற்கரைக்கு சென்றிருந்த போது சகோதரருடன் சேர்ந்து கடலில் குளித்துக் கொண்டிருக்கையில் இவரும் கடல் அலையில் சிக்குண்டுள்ளனர்.

கடல் அலையில் சிக்குண்ட இருவரும் மறுஅலையில் கரையை தட்டியநிலையில் இவர் உயிரிழந்த நிலையிலும், சகோதரர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சகோதரர் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.